கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டத கவிதையா எழுதி சந்தோஷப்பட்டுக்கிட்டேன். அந்த சந்தோஷந்தான் இந்த கஷ்டம். கஷ்டந்தான் - ஆனா சந்தோஷமாயிருக்கில்ல சந்தோஷந்தான் - ஆனா பூராம் கஷ்டமாயிருக்கு. இப்பிடி கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு இப்பல்லாம் கஷ்டமே சந்தோஷமாயிருச்சு - ஆனா சந்தோஷம் ரொம்ப கஷ்டமாயிருச்சு பாருங்க! நான் என் நிலைமைய சொல்றேன் உங்களுக்கு கஷ்டமாயிருக்கு! எனக்கு நிலைமையச் சொல்றதில மட்டுந்தான் சந்தோஷமே இருக்கு. ஆமாங்க!- நிலைமை அவ்ளோ கஷ்டமாயிருக்கு! சரி. . .. ரொம்ப கஷ்டப்டாதீங்க. கவிதைய முடிச்சிடறேன். சந்தோஷந்தானே . . . கஷ்டப்பட்டாத் தான் சந்தோஷம் கிடைக்கும்! சந்தோஷமான கஷ்டகாரன் -தமிழ் வசந்தன் |