Sunday, June 19, 2011

கஷ்டமும், சந்தோஷமும். . .

கஷ்டப்பட்டு
கஷ்டப்பட்டத
கவிதையா எழுதி
சந்தோஷப்பட்டுக்கிட்டேன்.

அந்த சந்தோஷந்தான்
இந்த கஷ்டம்.

கஷ்டந்தான் - ஆனா
சந்தோஷமாயிருக்கில்ல

சந்தோஷந்தான் - ஆனா
பூராம் கஷ்டமாயிருக்கு.

இப்பிடி கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு
இப்பல்லாம்
கஷ்டமே சந்தோஷமாயிருச்சு - ஆனா
சந்தோஷம் ரொம்ப கஷ்டமாயிருச்சு

பாருங்க!
நான் என் நிலைமைய சொல்றேன்
உங்களுக்கு கஷ்டமாயிருக்கு!
எனக்கு நிலைமையச்
சொல்றதில மட்டுந்தான்
சந்தோஷமே இருக்கு.
ஆமாங்க!- நிலைமை
அவ்ளோ கஷ்டமாயிருக்கு!

சரி. . .. ரொம்ப கஷ்டப்டாதீங்க.
கவிதைய முடிச்சிடறேன்.
சந்தோஷந்தானே . . .

கஷ்டப்பட்டாத் தான் 
சந்தோஷம் கிடைக்கும்!

சந்தோஷமான கஷ்டகாரன்
-தமிழ் வசந்தன்